Top News
| அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! | | மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்திய House of English இல்ல விளையாட்டுப் போட்டி | | 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு |
Oct 7, 2025

ஊழல் குற்றச்சாட்டில் அரசியல்வாதிகள் உட்பட 63 பேர் இதுவரை கைது – பிரதமர்

Posted on August 6, 2025 by Admin | 133 Views

2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், கையூட்டல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் கீழ் 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற வாய்மூல வினாக்களுக்கு பதில் அளிக்கும் அமர்வின் போது, பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவரது தகவலின்படி, கைது செய்யப்பட்டவர்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் அடங்குவதாகவும், 7 அரசியல்வாதிகள் நேரடியாக ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் 86 பேர் கையூட்டல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றதும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்தும் நோக்கில், அரசு ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,” என பிரதமர் ஹரிணி வலியுறுத்தினார்.