2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை இந்தாண்டு நவம்பர் 10ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.
மேலும், 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 2026 பெப்ரவரி 17ஆம் திகதி தொடங்கி பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.