Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முதல் மகப்பேற்று வைத்திய நிபுணர் என்ற பட்டத்தினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்தும் டாக்டர் சுதைஸ்

Posted on August 13, 2025 by Admin | 200 Views

இன்று வெளியான மகப்பேற்று வைத்திய நிபுணர் இறுதிப் பரீட்சை முடிவுகளின் படி, பாலமுனையைச் சேர்ந்த டாக்டர் ஏ.எல்.சுதைஸ் முகம்மட் அவர்கள் சித்தி பெற்றுள்ளார்.

பாலமுனை மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்களில் இருந்து மகப்பேற்று வைத்திய நிபுணராக உருவாகும் முதலாவது மருத்துவர் இவரே என்பதால், இச் சாதனையால் பாலமுனை மண்ணும் முழு அட்டாளைச்சேனை பிரதேசமும் பெருமை அடைகிறது.

டாக்டர் சுதைஸ் முகம்மட் அவர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டி, நாமும் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் அகமகிழ்கிறோம்