இன்று (25) காலை 8.00 மணிமுதல் நாடு தழுவிய அளவில் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கைவிட்டதாக அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட எழுத்து மூல உறுதிப்படுத்தலை அடுத்து, திட்டமிடப்பட்ட தொழிற்சங்க போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, வைத்தியர்கள் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முழு நாட்டிலும் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க அரச வைத்தியர்கள் சங்கம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது