Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 7, 2025

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட மருத்துவமனை சென்றார் பிரதமர் ஹரிணி எனும் செய்தி முற்றிலும் தவறானது

Posted on August 25, 2025 by Admin | 114 Views

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று (24) அதிகாலை சந்தித்தார் என சில ஊடகங்களில் வெளியான செய்திகளை, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

“ஹிரு நியூஸ்” வெளியிட்டிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அலுவலகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும், “பிரதமர் ஹரிணி அமரசூரியா மருத்துவமனைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் என்ற செய்தி முழுவதும் தவறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.