Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட மருத்துவமனை சென்றார் பிரதமர் ஹரிணி எனும் செய்தி முற்றிலும் தவறானது

Posted on August 25, 2025 by Admin | 142 Views

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, பிரதமர் ஹரிணி அமரசூரியா நேற்று (24) அதிகாலை சந்தித்தார் என சில ஊடகங்களில் வெளியான செய்திகளை, பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளது.

“ஹிரு நியூஸ்” வெளியிட்டிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அலுவலகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும், “பிரதமர் ஹரிணி அமரசூரியா மருத்துவமனைக்கு சென்று முன்னாள் ஜனாதிபதியை சந்தித்தார் என்ற செய்தி முழுவதும் தவறானது என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.