Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

கோட்டை நீதிமன்றம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு – சட்டத்தை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை

Posted on August 26, 2025 by Admin | 216 Views

கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

சட்ட மீறல்கள் அல்லது வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கலகத் தடுப்பு படைகள் மற்றும் காவல்துறையினரும் எப்போதும் தலையீடு செய்யத் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.