Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

கோட்டை நீதிமன்றம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு – சட்டத்தை மீறுவோருக்கு கடும் நடவடிக்கை

Posted on August 26, 2025 by Admin | 167 Views

கொழும்பில் நடைபெறவிருக்கும் போராட்டத்தை முன்னிட்டு, பொது ஒழுங்கை பேணவும் எந்தவித இடையூறும் ஏற்படாதவாறு அனைத்து காவல் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் (OIC) சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அறிவித்துள்ளது.

சட்ட மீறல்கள் அல்லது வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கலகத் தடுப்பு படைகள் மற்றும் காவல்துறையினரும் எப்போதும் தலையீடு செய்யத் தயார் நிலையில் காத்திருக்கின்றனர்.