Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்த வாய்ப்பில்லை – சிறைச்சாலைகள் திணைக்களம்

Posted on August 26, 2025 by Admin | 142 Views

தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (26) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

“மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், அவருக்கு மேலும் ஓய்வு அவசியம் என்பதால் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாத்தியமில்லை,” என்று சிறைச்சாலைகள் ஊடக ஆணையாளர் ஜகத் வீரசிங்க கூறினார்.

இதேவேளை, நீதிமன்றம் (Zoom) தொழில்நுட்பம் வழியாக விக்ரமசிங்கவை இணைக்க உத்தரவிட்டால், அதற்கான தேவையான வசதிகளை ஏற்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.