Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனையின் அபிவிருத்திகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on August 27, 2025 by Admin | 129 Views

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி. அஹமட் அப்கர் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27.08.2025) அட்டாளைச்சேனை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ்,பிரதித் தவிசாளர் பாறூக் நஜீத்,பிரதேச சபை கௌரவ உறுப்பினர்கள், உதவி பிரதேச செயலாளர் எப். நஹீஜா முஸாபிர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ. மஜீட், பிரதேச செயலக கணக்காளர் எம்.எப். பர்ஹான் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.