Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

ஒலுவில் பொது மைதானத்திற்கான காணி ஒதுக்கப்பட்டது – உதுமாலெப்பையின் முயற்சிக்கு வெற்றி

Posted on August 27, 2025 by Admin | 133 Views

(அபூ உமர்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அமைந்துள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் நிலப்பகுதியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கான விளையாட்டு மைதானமாக மாற்றுவதற்கு காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹால் தனது அனுமதியை வழங்கியுள்ளார்.

இந்த உத்தியோகபூர்வ அறிவிப்பு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.கே. நிஹாலை சந்தித்து ஒலுவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான நிலப்பகுதியை ஒதுக்கிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.