பொதுமக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் சம்பவங்கள் தொடர்பாக எளிதாக முறைப்பாடு செய்யும் வகையில், புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு, 077 777 1954 என்ற வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்துள்ளது.
முறைப்பாடுகளை விரைவாகவும் சிரமமின்றியும் பதிவு செய்ய இந்த புதிய வசதி உதவும் என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.