2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாத அஸ்வெசும நிவாரண உதவித் தொகை நாளை மறுநாள் (12) முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
இந்த நிவாரண உதவிக்காக மொத்தம் ரூ. 11,201,647,000 ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது 1,412,574 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் 12ஆம் திகதி முதல் தகுதி பெற்ற பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகள் மூலம் உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.