Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

சபாநாயகரை ஜெனீவாவில் முறைப்பாடு செய்ய உள்ள அர்ச்சுனா எம்பி

Posted on September 10, 2025 by Admin | 170 Views

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அடுத்த வாரம் பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

தனக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அநீதிகளை முன்னிறுத்தி, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன மற்றும் அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க எதிராகவே முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த மார்ச் 19ஆம் திகதி முதல் மே 9ஆம் திகதி வரை, ஒன்றரை மாத காலப்பகுதியில், எந்தக் காரணமும் கூறாமல் நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், இது தன்னிடம் பெரும் அநீதியாக அமைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு, சபாநாயகர் தன்னிடம் உரையாற்றும் உரிமையைத் தடை செய்ததாகவும், இதுகுறித்து தானே சிறப்புரிமைக் குழுவிடம் கேள்வி எழுப்பியிருந்ததாகவும் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.

மேலும், சிறப்புரிமைக் குழுவில் தான் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டிருந்தபோதிலும், அநீதி செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளன என்றும், இந்த விவகாரத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் எடுத்துச் செல்ல உள்ளதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.