Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” ஒலுவிலில் நடந்தேறியது

Posted on September 15, 2025 by Admin | 92 Views

(ஒலுவில் செய்தியாளர்)

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் “வாரத்திற்கு ஒரு நாள் வேலைத்திட்டம்” கடந்த 06.09.2025 அன்று ஒலுவிலில் முன்னெடுக்கப்பட்டது.

இச்சிரமதான நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் அவர்களின் வழிகாட்டுதலில் ஒலுவில் அல்-ஹம்றா வட்டாரத்தைச் சேர்ந்த பிரதேச சபை உறுப்பினர் மீராலெவ்வை றினாஸ் அவர்களின் தலைமையில் ஒலுவில் முதலாம் பிரிவில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர், கெளரவ உறுப்பினர்கள், பிரதித் தவிசாளர், சபையின் செயலாளர், சபையின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த வேலைத்திட்டம் பிரதேச மக்களின் தேவைகளுக்கு தீர்வுகாணும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.