திருகோணமலை கடற்கரையில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் கடலில், இன்று மாலை 4.06 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக பேரிடர் முகாமைத்துவ மையம் (DMC) அறிவித்துள்ளது.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் இலங்கையின் கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று DMC மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.