Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

கட்டுநாயக்க விமான நிலைய கழிப்பறையில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் மீட்பு

Posted on September 21, 2025 by Admin | 71 Views

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து 16 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 16.84 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருள் பொதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.

கழிப்பறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர், அங்கு சந்தேகத்திற்கிடமான பொதிகளை கண்டுபிடித்து உடனடியாக சுங்கத் துறை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடைய நபர்களைக் கண்டறிய விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.