Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பதிவாளராக பொறுப்பேற்பு

Posted on September 24, 2025 by Admin | 161 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பதிவாளராக நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப் எச்.எம்.ஏ. ஹசன் அவர்கள் நேற்று (23.09.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட சுப்ரா தரத்தில் பணியாற்றி வந்த ஹசன் அவர்கள், அரச சேவையில் நீண்டகால அனுபவம் மற்றும் திறமைகளை கொண்ட சிறந்த நிர்வாக ஆளுமையாக கருதப்படுகிறார்.

அவரது ஆற்றல், ஒழுங்குமுறை திறன் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாக முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.