Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

நிந்தவூரைச் சேர்ந்த ஹசன் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி பதிவாளராக பொறுப்பேற்பு

Posted on September 24, 2025 by Admin | 238 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் புதிய பதிவாளராக நிந்தவூரைச் சேர்ந்த ஜனாப் எச்.எம்.ஏ. ஹசன் அவர்கள் நேற்று (23.09.2025) பொறுப்பேற்றுக் கொண்டார்.

அரச முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட சுப்ரா தரத்தில் பணியாற்றி வந்த ஹசன் அவர்கள், அரச சேவையில் நீண்டகால அனுபவம் மற்றும் திறமைகளை கொண்ட சிறந்த நிர்வாக ஆளுமையாக கருதப்படுகிறார்.

அவரது ஆற்றல், ஒழுங்குமுறை திறன் மற்றும் சேவைக்கான அர்ப்பணிப்பு, அட்டாளைச்சேனை தேசிய கல்வியற் கல்லூரியின் நிர்வாக முன்னேற்றத்திற்கு பெரும் பங்களிப்பாக அமையும்.