Top News
| இலங்கையில் ஒரே நாளில் 13000 ரூபாவால் சரிந்த தங்கத்தின் விலை | | வேறொரு தொலைபேசி இலக்கத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கான QR குறியீட்டை பெறும் முறை | | போலி இணையத்தளங்கள் மூலம் QR குறியீடு மோசடி |
Mar 20, 2026

சம்மாந்துறையில் கை ஒலிபெருக்கியினால் வியாபாரம் செய்ய தடை மீறினால் பறிமுதல்

Posted on October 2, 2025 by Admin | 290 Views

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதான வீதிகளில் கை ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி வியாபாரம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து கிடைத்த முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய செயல்பாடுகள் மதஸ்தலங்களில் நடைபெறும் வணக்க வழிபாடுகளுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்ததோடு, அதிக ஒலி காரணமாக மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை பிரதேச சபையும் சம்மாந்துறை பொலிஸாரும் இணைந்து ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். கடந்த 2025 செப்டம்பர் 4 முதல் 23 வரை 11 கை ஒலிபெருக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிரதேச சபை தகவல் மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமெனவும் அனைத்து வியாபாரிகளும் சபையின் விதிமுறைகளை மதித்து பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.