Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

இறக்காமம் பிரதேச அபிவிருத்தி குறித்து நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

Posted on October 15, 2025 by Admin | 188 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

இறக்காமம் பிரதேச அபிவிருத்தியை மையமாகக் கொண்டு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (15.10.2025) பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் அவர்களின் ஒருங்கிணைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் திரு. மன்ஜுல ரத்நாயக்க தலைமையில் இறக்காமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், இறக்காமம் பிரதேச சபை தவிசாளர் எம். முஸ்மி, பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸார், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், பிரதேச மக்களின் நலனையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கான பல முக்கியமான விவாதங்கள் மற்றும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.