வெலிகம பிரதேச சபைத் தலைவர் ‘மிதிகம லசா’ எனும் லசந்த விக்ரமசேகர இன்று (22) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்.
அவர் பிரதேச சபையில் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் சபைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
கடுமையாக காயமடைந்த விக்ரமசேகரவை உடனடியாக பிரதேச சபை அதிகாரிகள் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
துப்பாக்கிதாரிகள், ஒரு ஆவணத்தில் கையொப்பம் பெறுவது போல நடித்துக்கொண்டு சபைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என தெரியவந்துள்ளது.