Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

பாடசாலை நேர நீடிப்புக்கு ஆசிரியர்-அதிபர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு

Posted on October 24, 2025 by Admin | 123 Views

2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரத்தை 30 நிமிடங்கள் நீடிக்கும் அரசாங்கத் திட்டத்திற்கு ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இன்று (24) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஆசிரியர்-அதிபர் சங்கங்கள், “நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை நேர திருத்தம் குறித்த முடிவை அரசு மாற்றவில்லை எனில் புதிய தவணை தொடங்கியவுடன் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்துள்ளன.