Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர் பிடிபட்டார்

Posted on October 26, 2025 by Admin | 137 Views

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம நாவின்ன பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையின்போது குறித்த நபர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் விளைவாக இந்த கைது இடம்பெற்றது.

இக்காரியத்தில் அரச புலனாய்வு சேவையும் ஒத்துழைப்பு வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.