கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பின்படி நாட்டிலுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்டம் நாளையுடன் (07.11.2025) நிறைவடைகிறது.
இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தொடங்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நவம்பர் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.