Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

காசாவில் போர் நிறுத்தம் பலனின்றி நூற்றுக்கணக்கான பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

Posted on November 9, 2025 by Admin | 118 Views

காசா பகுதியில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும் வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, போர் நிறுத்தம் அமல்பெற்ற கடந்த அக்டோபர் 11-ஆம் தேதி முதல் இதுவரை குறைந்தது 241 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 619 பேர் காயமடைந்துள்ளனர்.

இதனிடையே, காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களின் தொடர்ச்சியாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பலஸ்தீன சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.