Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அரசாங்க வைத்தியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்

Posted on November 16, 2025 by Admin | 113 Views

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை (17)தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் வரவுசெலவுத் திட்டத்தில் சுகாதாரத் துறை மற்றும் அரசு வைத்தியர்களைச் சுற்றியுள்ள முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படாததை எதிர்த்து இந்த நடவடிக்கையை எடுக்கிறோம் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு முன்பே அறிவித்திருந்தபோதிலும், இதுவரை எவ்வித நேர்மறையான பதிலும் கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.