Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஆடைத்தொழிற்சாலை திறப்பு

Posted on November 19, 2025 by Admin | 66 Views

(ஆலங்குளம் செய்தியாளர்)

அட்டாளைச்சேனை ஆலம் குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஆடைத்தொழிற்சாலை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை ஆலம் குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சிறிய ஆடைத்தொழிற்சாலை நேற்று (19.11.2025) புதன்கிழமை திறக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியஸ்திஸ்ஸ, சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவும் கலந்துகொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், பிரதியமைச்சரின் இணைப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ஆடைத்தொழிற்சாலையானது உள்ளூர் மக்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கும் களமாக இது அமைந்துள்ளது.