வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையாக மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் அபாயங்களை முன்னிட்டு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி பொதுமக்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.