Top News
| தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை | | மோட்டார் சைக்கிளின் சிக்னல் ஒளிராமை தொடர்பான வழக்கில் 3200 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் கைது | | ஒன்பது வளைவுப் பாலம் மண்சரிவு அபாயத்தில் |
Dec 18, 2025

பாலமுனையில் வெள்ளநீர் வடிந்தோடுவதற்கான பணிகள் பிரதேச சபையினால் முன்னெடுப்பு

Posted on November 26, 2025 by Admin | 98 Views

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் பாலமுனை இரண்டு வட்டாரங்களிலும் வெள்ள நீரை வடிந்தோடச் செய்வதற்கான பணிகள் நேற்று (25) ஆரம்பிக்கப்பட்டன.

மேலும் இரண்டு வட்டாரங்களிலும் மீதமாகவுள்ள வடிகான்களை துப்பரவு செய்வதற்கான பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படவுள்ளன. அதிக பாதிப்புள்ள முக்கிய பகுதிகள் நேற்று துப்பரவு செய்யப்பட்டன. எமது பிரதேசத்தில் விடுபட்ட ஏனைய பகுதிகளிலும், மிக விரைவாக திட்டமிட்டபடி கட்டம் கட்டமாக இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

‎தனது கோரிக்கையை ஏற்று நேரடியாகக் களமிறங்கிப் பணியாற்றிய கெளரவ தவிசாளர் ஏ.எஸ் எம். உவைஸ் அவர்களுக்கும்,
மேலும் தன்னுடன் களத்தில் நின்று ஒன்றாக பணியாற்றிய உதவித்
தவிசாளர் பாறூக் நஜி, முன்னாள் தவிசாளரும் பிரதேச சபை உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்சில், உட்பட பிரதேச சபை ஊழியர்களுக்கும், எமது பிரதேசத்தின் இளைஞர்களுக்கும் நலன் விரும்பிகளுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை பிரதேச சபை உறுப்பினர் சிறாஜ் தெரிவித்துக் கொண்டார்.