Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும்(27) நாளையும்(28) உயர் தரப் பரீட்சை நடைபெறாது

Posted on November 27, 2025 by Admin | 230 Views

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் மோசமான வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலைகளின காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியானகே வெளியிட்ட விசேட அறிக்கையில் இன்று (நவம்பர் 27) மற்றும் நாளை (நவம்பர் 28) ஆகிய தினங்களில் நடத்தப்பட வேண்டிய பரீட்சைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.