அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான இஸ்மாயில் முத்து முஹம்மது ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக நுழைந்தவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இன்று பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி விலகலை அறிவித்தார்.
சுய விருப்பத்துடன் கட்சியின் முடிவுக்கு அமைய தலைமைக்கு துரோகம் இழைக்காமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அவர் குறிப்பிட்டார்.