நாடு முழுவதும் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக 11 மாவட்டங்களைச் சேர்ந்த 93 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
பதுளை மாவட்டத்தில் ஊவ பரணகம, ஹப்புத்தளை, பண்டாரவளை, ஹாலிஎல, பதுளை, லுணுகல, பசறை, மீகஹகிவுல, சொரணத்தோட்டை, வெலிமடை, எல்ல, கந்தகெட்டிய மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பகுதிகளுக்கு சிவப்பு நிற வெளியேறல் எச்சரிக்கை தொடர்கிறது.
கண்டி மாவட்டத்தின் பன்வில, பாததும்பர, கங்க இஹல கோரளை, உடுநுவர, தொழுவ, பூஜாபிட்டிய, மினிப்பே, கங்கவட்ட கோரளை, அக்குறணை, பஸ்பாகே கோரளை, ஹதரலியத்த, ஹாரிஸ்பத்துவ, பாதஹேவாஹெட்ட, உடுதும்பர, தும்பனே, உடுப்பலாத, குண்டசாலை, யட்டிநுவர, தெல்தோட்டை மற்றும் மெததும்பர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளும் உயர் அபாயப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கேகாலை மாவட்டத்தில் ரம்புக்கனை, மாவனல்லை, தெரணியகல, யட்டியாந்தோட்டை, கலிகமுவ, வரகாபொல, ருவான்வெல்ல, அரநாயக்க, கேகாலை, புளத்கொஹுபிட்டிய, தெஹியோவிட்ட ஆகிய பிரதேசங்களும், குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல, அலவ்வ, நாரம்மல, மாவத்தகம, மல்லவப்பிட்டிய மற்றும் ரிதிகம ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை அமுலில் உள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ, அம்பங்கங்க கோரள, பல்லேபொல, உக்குவளை, நாவுல, லக்கல–பல்லேகம, யட்டவத்த, ரத்தோட்டை, மாத்தளை ஆகிய பகுதிகளுக்கும், மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகொட பிரதேசங்களுக்கும் வெளியேறல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல, நுவரெலியா மாவட்டத்தில் ஹங்குரான்கெத்த, மதுரட்ட, நுவரெலியா, கிழக்கு கொத்மலை, மேற்கு கொத்மலை, தலவாக்கலை, நோர்வுட், அம்பகமுவ, நிள்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை ஆகிய பிரதேசங்களும், இரத்தினபுரி மாவட்டத்தின் பல பிரதேசங்களும் உயர்பட்ட சிவப்பு எச்சரிக்கை பட்டியலில் உள்ளன.
இதனுடன், கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல்ல பிரதேசத்திற்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க, பாதுக்கை பகுதிகளுக்கும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும், களுத்துறை, காலி, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேசங்களுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை மற்றும் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டங்களின் 31 பிரதேசங்களுக்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை தொடர்வதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.