Top News
| QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை | | எரிபொருள் QR முறை சிக்கல்களுக்கு தீர்வு |
Mar 18, 2026

தடைப்பட்டுள்ள நீர் விநியோகம் தொடர்பாக வெளியான அறிவிப்பு

Posted on November 30, 2025 by Admin | 272 Views

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள நீர் விநியோகத்தை அடுத்த மூன்று நாட்களுக்குள் முழுமையாகச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியாளர் ஏ. எம். பி. சி. டி. பண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நேரடி வழிகாட்டலின் பேரில், முப்படைகள், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மின்சார சபை ஆகியவற்றின் உதவியுடன் சேவை மீட்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று (30) முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், தொடர்ந்த மழை காரணமாக பல நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பம்பி நிலையங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், குறிப்பாக கண்டி மாவட்டத்தில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது திஸ்ஸமஹாராம, கதிர்காமம், பதுளை, பண்டாரவளை, வெலிமடை, அம்பாறை, வடமத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், காலி, அனுராதபுரம், மட்டக்களப்பு மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் நீர் விநியோகம் 100 சதவீதம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் அம்பத்தலே, லபுகம, கலபுவாவ மற்றும் பியகம போன்ற முக்கிய நீர்மூலங்கள் சேதமடையவில்லை என்றும், களனி நதியின் பெருக்கு காரணமாக ஏற்பட்டிருந்த அபாயம் தற்போது குறைந்துவிட்டதாகவும் தலைவர் விளக்கினார்.

நீர் விநியோகம் தடைபட்ட பகுதிகளுக்கு பவுசர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகின்றது. மீதமுள்ள பகுதிகளில் முப்படைகள் மற்றும் தொடர்புடைய துறைகளின் உதவியுடன் சேவை மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மூன்று நாட்களுக்குள் நாடு முழுவதும் 100 சதவீத நீர் விநியோகம் மீளமைக்கப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.