Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

Posted on December 24, 2025 by Admin | 145 Views

நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை அமுலில் இருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கு நேற்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த வழக்கில் அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

அந்த பிடியாணையின் அடிப்படையில் இன்று அவர் பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.