Top News
| ஒவ்வொரு புதன்கிழமையும் அரச விடுமுறை -அரசின் அதிரடி அறிவிப்பு | | QR முறைமை அறிமுகப்படுத்தப்பட்டமைக்கான உண்மையான காரணம் | | இன்று முதல் QR இல்லாமல் எரிபொருள் இல்லை |
Mar 18, 2026

அர்ச்சுனா எம்.பி பிணையில் விடுவிப்பு

Posted on December 24, 2025 by Admin | 195 Views

நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணை அமுலில் இருந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதன் பின்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நீதவான் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கு நேற்று (23) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எனினும் குறித்த வழக்கில் அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை அடுத்து நீதிமன்றம் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பித்திருந்தது.

அந்த பிடியாணையின் அடிப்படையில் இன்று அவர் பொலிஸில் சரணடைந்ததை தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.