சுற்றுலா மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டி இன்று (28) திருவனந்தபுரத்தில் இரவு 7.00 மணிக்கு தொடங்கவுள்ளது.
இரு அணிகளுக்கிடையே ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடராக இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஏற்கனவே இந்த இருபதுக்கு-20 தொடரை கைப்பற்றியுள்ளது.