(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை House of English நிறுவனத்தின் முன்பள்ளி மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ரி.நகீல் தலைமையில் அதிபர் எம்.எஸ்.ஜெனீஸின் ஒருங்கிணைப்பில் 2025.02.03ம் திகதி சாரா பீச் ரிசோர்டில் மக விமரிசையாக இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சவூதி தூதரக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம்.ஏ.நஜீட், முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.கே.முஹம்மட், முன்னாள் அதிபர் எம்.ஏ.அன்சார், ஆசிரிய ஆலோசகர் என்.ரி. நசீர் மெளலவி மற்றும் கல்விமான்கள், உலமாக்கள், புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
மாணவர்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கப்பட்டதுடன் இவ்வாண்டுக்கான நான்கு பயிற்சிப் புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




