QR குறியீட்டு முறையின் கீழ் வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீட்டை இன்று (21) நள்ளிரவு முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய திருத்தத்தின் படி வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பின்வருமாறு உயர்த்தப்பட்டுள்ளது:
அதே நேரத்தில், லொறிகளுக்கான 200 லீற்றர் ஒதுக்கீடும் விசேட தேவைக்கான வாகனங்களுக்கு வழங்கப்படும் 40 லீற்றர் ஒதுக்கீடும் மாற்றமின்றி தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விநியோகத்தை சீரமைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.