அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய செயலாளராக ஆர்.எம். நழீல் அவர்கள் இன்று உத்தியோகபூர்வமாகப் கடமைகளை பொறுப்பேற்றார்.
முகாமைத்துவ சேவையின் அதிவிசேட தரத்தைச் சேர்ந்த அனுபவமிக்க நிர்வாக அதிகாரியும் 36 ஆண்டுகளுக்கும் மேலாக அரச பணிச்சேவையில் ஈடுபட்டு வரும் இவர் அட்டாளைச்சேனை, லாகுகல, அக்கரைப்பற்று மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேச செயலகங்களில் நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றி தனது திறமையான நிர்வாகத்தாலும் மக்களுடன் கொண்ட நெருக்கத்தாலும் வளர்ச்சியை எட்டியுள்ளார்.
தனது கடமைகளை பொறுப்பேற்கும் இன்றைய நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் கலந்து கொண்டு புதிய செயலாளருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.