Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் பொலிஸார் புதிய நடவடிக்கை

Posted on November 2, 2025 by Admin | 281 Views

பாதுகாப்பு அச்சுறுத்தல்களைப் பற்றிய விரிவான ஆய்வுக்குப் பிறகு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு தேவைப்படுவதாக நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுத்து மூலம் கோரிக்கை சமர்ப்பிக்கலாம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தகைய கோரிக்கைகள் பெறப்பட்ட பின்னர் உறுப்பினர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் குறித்து ஆய்வு நடத்தி உண்மையில் பாதுகாப்பு தேவைப்படுவது உறுதியானால் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கான தனிப்பட்ட பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.