Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் ஒக்டோபர் மாத செயற்பாடுகளின் தரப்படுத்தல்

Posted on November 15, 2025 by Admin | 353 Views

கடந்த மாதம்(ஒக்டோபர்) நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச சபை அமர்வில் உறுப்பினர்கள் சமர்ப்பித்த மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைகளின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தெளிவு தளம் உறுப்பினர்களை தரப்படுத்தல் செய்துள்ளது. இதில் அதிகபட்ச பிரேரணைகள் சமர்ப்பித்தவர்களின் பட்டியல் பின்வருமாறு:

  • கெளரவ ஏ.சி.எம். நியாஸ் – 9 பிரேரணைகள்
  • கெளரவ ஏ.எல். பாயிஸ் – 5 பிரேரணைகள்
  • கெளரவ எ.எல். அஸ்வர் – 4 பிரேரணைகள்
  • கெளரவ எஸ்.ஐ. ரியாஸ் – 4 பிரேரணைகள்
  • கெளரவ ஐ.ஏ. சிறாஜ் – 4 பிரேரணைகள்
  • கெளரவ சி.எம். ஜனூஸா – 3 பிரேரணைகள்
  • கெளரவ எஸ். பாஹிமா – 2 பிரேரணைகள்

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், மற்ற உறுப்பினர்கள் யாரும் கடந்த மாத அமர்வில் பிரேரணைகள் சமர்ப்பிக்கவில்லை.

சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்கள்

கடந்த மாத சபை அமர்வில் பங்கேற்காத உறுப்பினர்களின் பட்டியல்:

  • கெளரவ எம். ரியா
  • கெளரவ ஏ.எல். அமானுல்லாஹ்

இந்த தகவல்கள் சபை செயல்பாடுகளில் உறுப்பினர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றன.