Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை ஆலங்குளம் பகுதியில் 7 மில்லியன் ரூபாய் முதலீட்டில் ஆடைத்தொழிற்சாலை திறப்பு

Posted on November 19, 2025 by Admin | 291 Views

(ஆலங்குளம் செய்தியாளர்)

அட்டாளைச்சேனை ஆலம் குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய ஆடைத்தொழிற்சாலை அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை ஆலம் குளம் பிரதேசத்தில் 7 மில்லியன் ரூபாய் செலவில் கட்டப்பட்ட புதிய சிறிய ஆடைத்தொழிற்சாலை நேற்று (19.11.2025) புதன்கிழமை திறக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியஸ்திஸ்ஸ, சிறப்பு அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவும் கலந்துகொண்டார்.

மேலும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, பாராளுமன்ற உறுப்பினர்களின் செயலாளர்கள், பிரதியமைச்சரின் இணைப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள், திட்ட பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ஆடைத்தொழிற்சாலையானது உள்ளூர் மக்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி மற்றும் தொழில் வாய்ப்புகள் உருவாக்கும் களமாக இது அமைந்துள்ளது.