Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

கிழக்கில் நிலவும் மோசமான வானிலை காரணமாக முன்பள்ளிகளுக்கு நவம்பர் 30 வரை விடுமுறை

Posted on November 26, 2025 by Admin | 200 Views

நாட்டில் தொடர்ந்து பதிவாகி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கிழக்கு மாகாணத்திலுள்ள முன்பள்ளிகள் நவம்பர் 30ஆம் திகதி வரை விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான வானிலை நிலைமைக்கு ஏற்ப, நவம்பர் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை அனைத்து முன்பள்ளி கல்வி நிலையங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக கிழக்கு மாகாண முன்பள்ளிப் பணியகத்தின் பொது முகாமையாளர் கே. ஜெயவதனன் தெரிவித்தார்.