Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

சீரற்ற காலநிலை காரணமாக இன்றும்(27) நாளையும்(28) உயர் தரப் பரீட்சை நடைபெறாது

Posted on November 27, 2025 by Admin | 288 Views

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் மோசமான வானிலை மற்றும் அனர்த்த சூழ்நிலைகளின காரணமாக 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. (உயர் தர) பரீட்சை இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக்க லியானகே வெளியிட்ட விசேட அறிக்கையில் இன்று (நவம்பர் 27) மற்றும் நாளை (நவம்பர் 28) ஆகிய தினங்களில் நடத்தப்பட வேண்டிய பரீட்சைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகளுக்கான புதிய திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் நாயகம் மேலும் கூறியுள்ளார்.