Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

இலங்கை நீண்ட தூர பேருந்துகளில் AI தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு

Posted on June 5, 2025 by Arfeen | 82 Views

பாதுகாப்பான வீதி போக்குவரத்தை உறுதி செய்யும் நோக்கில், இலங்கை போக்குவரத்து சபை (SLTB) மற்றும் தனியார் பங்களிப்பு கொண்ட நீண்ட தூரப் பேருந்துகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்காணிப்பு சாதனங்களை நிறுவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், வருகிற இரண்டு மாதங்களில் முதல்கட்டமாக 40 பேருந்துகளில் இந்த AI கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படும் எனத் தெரிவித்தார்.

இலங்கையின் போக்குவரத்து அமைப்பில் மேம்பாடு அவசியம் என்ற உண்மையை ஏற்றுக்கொண்ட அமைச்சர், வீதிப் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு ஒரு முழுமையான செயல் திட்டத்தை அமைச்சகம் அமல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.