Top News
| கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களில் 75 மி.மீ வரை பலத்த மழைக்கு வாய்ப்பு | | மக்களின் துயர் துடைத்த அக்கரைப்பற்று மாநகர சபை, காத்தான்குடி,ஏறாவூர் நகர சபைகளின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைந்துள்ளன | | தொடர் மழையால் வான் பாயும் நீர்த்தேக்கங்கள்- தாழ்நில மக்களுக்கு எச்சரிக்கை |
Dec 20, 2025

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு

Posted on November 30, 2025 by Admin | 114 Views

சீரற்ற வானிலையால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திர கணினி அமைப்பில் ஏற்பட்ட கோளாறினால் வேரஹெர உட்பட பிரதான அலுவலகங்களில் நாளை (1) அனைத்துப் பணிகளும் நிறுத்தப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

கணினி கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பக் குழுவினர் வேகமாக பணிபுரிந்து வருவதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, வேரஹெர பிரதான அலுவலகம் மற்றும் குருநாகல், களுத்துறை, ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மொனராகலை, கண்டி, காலி, அம்பாறை உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கும் இணையவழி அலுவலகங்களில் சாரதி அனுமதிப்பத்திர அச்சிடல், புதிய அனுமதிப்பத்திரம் விண்ணப்பித்தல் மற்றும் அனுமதிப்பத்திரம் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படமாட்டாது.

அத்துடன் இந்த கோளாறு வாகனப் பதிவு மற்றும் உரிமை மாற்றம் போன்ற பிற அமைப்புகளை பாதிக்காததால் அவை வழக்கம்போல் செயல்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.