Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

பலாங்கொடை பாடசாலையில் மரக்கிளை விழுந்து மாணவர் உயிரிழப்பு

Posted on June 12, 2025 by Hafees | 221 Views

பலாங்கொடை பகுதியில் உள்ள பாடசாலை கட்டிடத்தின் மீது மரக்கிளை விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (12) மதியம் நிகழ்ந்துள்ளது.

விபத்தில் மேலும் 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பலாங்கொடை பொலிசார் தெரிவித்தனர்.

இறந்தவர் 17 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து பலாங்கொடை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.