Top News
| சிகிரியா உலக பாரம்பரிய தளத்திற்கு பாதுகாப்பு திட்டம் | | நீர்கொழும்பு துங்கல்பிடிய பகுதியில் துப்பாக்கிச் சூடு | | அட்டாளைச்சேனை தவிசாளர் உவைஸ் அவர்களின் வாட்ஸ்அப் ஹேக் – பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை |
Jul 3, 2025

2009ற்கு முன்னர் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்படுமா? – போக்குவரத்துத் திணைக்களம் விளக்கம்

Posted on June 16, 2025 by Admin | 180 Views

2025 ஜூன் 12 ஆம் திகதி வெளியாகிய பத்திரிகை செய்திகளிலும் சமூக ஊடகங்களிலும் வெளியிடப்பட்ட, “2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்” என்ற செய்தி தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் விளக்கமொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் கூறப்பட்டது போன்று 2009க்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை இரத்து செய்யும் தீர்மானம் எதுவும் திணைக்களம் இதுவரை எடுக்கவில்லை எனவும், சம்பந்தப்பட்ட விடயத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படாத நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்றன எனவும் திணைக்களம் கூறியுள்ளது.

மேலும், 2009க்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ள நபர்கள், அவற்றிற்குப் பதிலாக புதிய அனுமதிப்பத்திரங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என திணைக்களம் ஏற்கனவே ஊடகங்களின் ஊடாக அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.