Top News
| அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களின் செயல்திறன் தரவரிசை வெளியீடு | | கல்முனை காதி நீதிபதி இலஞ்சம் வாங்கிய வழக்கில் மனைவியுடன் சேர்ந்து பிடிபட்டார் | | அல்குர்ஆன் பிரதிகள் சுங்கத்தில் தடுத்துவைக்கப்படுள்ளமை குறித்து உதுமாலெப்பை எம்பி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளருடன் கலந்துரையாடல் |
Aug 19, 2025

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

Posted on May 17, 2025 by Admin | 43 Views

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானியை இன்று (16) கொழும்பிலுள்ள தூதரகத்தில் சந்தித்து விசேட கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு பல்வேறு சமகால பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்துக் கொண்டதாக இருந்தது. இதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சவூதி தூதுவருடன் ஒரு சுமூகமான மற்றும் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. நமது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வழிகள் குறித்தும் விரிவாகப் பேசினோம். தூதுவரின் அன்பான வரவேற்பையும், உறவுகளை வலுப்படுத்துவதில் காட்டும் அர்ப்பணிப்பையும் நான் உளமார பாராட்டுகிறேன்,” என்றார் ரிஷாட் பதியுதீன்.