Top News
| ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம் | | இன்று இரவு 11 மணி வரை பலத்த மின்னல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை | | அமைதிக்கான நோபல் பரிசு ட்ரம்ப்க்கு கிடைக்குமா? உலகம் முழுவதும் சர்ச்சை! |
Oct 7, 2025

பஸ்சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – ஜூலை 1 முதல் நடைமுறை

Posted on June 28, 2025 by Admin | 174 Views

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஜூலை 1, 2025 முதல் ஆசனப்பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து சபை தலைவர் பி.ஏ. சந்திரபாலா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (27) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, “பயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, சாரதிகளின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது சர்வதேச தரமான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் முக்கியத்துவமான ஒரு கட்டமாகும்” என்றார்.

மேலும், விதிமீறல் செய்யும் சாரதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.