Top News
| பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட அட்டாளைச்சேனை அல் இபாதா கலாசார மன்றத்தின் 15வது வருட இப்தார் நிகழ்வு | | QR பதிவு சிக்கலின் தீர்வுக்கு 0760001919 எனும் வட்ஸப் இலக்கம் அறிமுகம் | | எரிபொருள் விநியோகத்தில் மாற்றம் – வாகன இலக்க எண் படி எரிபொருள் வழங்க நடவடிக்கை |
Mar 18, 2026

பஸ்சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – ஜூலை 1 முதல் நடைமுறை

Posted on June 28, 2025 by Admin | 317 Views

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஜூலை 1, 2025 முதல் ஆசனப்பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து சபை தலைவர் பி.ஏ. சந்திரபாலா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (27) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, “பயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, சாரதிகளின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது சர்வதேச தரமான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் முக்கியத்துவமான ஒரு கட்டமாகும்” என்றார்.

மேலும், விதிமீறல் செய்யும் சாரதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.