Top News
| இலங்கையில் சமூக ஊடகங்களுக்கு போடப்படவுள்ள மூக்கணாங்கயிறு | | தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி |
Jan 22, 2026

பஸ்சாரதிகள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயம் – ஜூலை 1 முதல் நடைமுறை

Posted on June 28, 2025 by Admin | 290 Views

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) உள்ளிட்ட அனைத்து பொதுப் போக்குவரத்து பஸ்களின் சாரதிகளும் ஜூலை 1, 2025 முதல் ஆசனப்பட்டி (Seat Belt) அணிவது கட்டாயமாக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து சபை தலைவர் பி.ஏ. சந்திரபாலா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (27) ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, “பயணிகளின் பாதுகாப்பு மட்டுமல்ல, சாரதிகளின் உயிர் பாதுகாப்பையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது சர்வதேச தரமான போக்குவரத்து பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றும் முக்கியத்துவமான ஒரு கட்டமாகும்” என்றார்.

மேலும், விதிமீறல் செய்யும் சாரதிகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.