Top News
| சவூதியில் கைதான ஜம்இய்யதுல் உலமா சபை செயலாளர் இலங்கை திரும்பினார் | | திருக்கோவிலில் அட்டாளைச்சேனை சோபர் அணி சாதனை | | மரணத்துடன் போராடும் 9 வயது சிறுமி- உங்களால் முடிந்த நிதி உதவியை வழங்குங்கள் |
Jun 1, 2026

ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது பணிப்பகிஷ்கரிப்பு முடிவடைந்தது

Posted on May 18, 2025 by Admin | 307 Views

ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு நேற்று (17ஆம் தேதி) நள்ளிரவில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (18ஆம் தேதி) ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின் படி இயங்கும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பிற்குப் பிறகு, தற்போது ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தங்கள் கடமைகளுக்கு மீண்டும் அமர்ந்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத் தலைவர் சுமேத் சோமரத்ன கூறினார்.

அத்துடன், தங்களின் தொழில்சார் கோரிக்கைகள் தொடர்பாக நாளை (19ஆம் தேதி) மீண்டும் கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்த முடிவும் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளுக்கான நடைமுறைகளில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டுமென வலியுறுத்தி, இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று சுமார் 90 ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது.