Top News
| மருதமுனையில் கோர விபத்து:அரச உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி | | உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் அதிரடி மாற்றங்கள் | | அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு பைத்துல் ஹிக்மா நிறுவனத்தின் மகத்தான கௌரவம் |
Jul 16, 2026

அட்டாளைச்சேனை பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் வசம்!

Posted on July 2, 2025 by Admin | 458 Views

அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை நிர்ணயிக்கும் கூட்டம் இன்று (புதன்கிழமை) அட்டாளைச்சேனை பிரதேச சபை மண்டபத்தில் 02:00 மணிக்கு இடம்பெற்றது. இந்த கூட்டத்துக்கு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி தலைமை வகித்தார்.

பிரதேச சபையில் 18 உறுப்பினர்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 8 ஆசனங்களை பெற்றிருந்தது. SLMC கட்சி ஆட்சி அமைக்க தேசிய காங்கிரஸ் (2 உறுப்பினர்கள்) மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (1 உறுப்பினர்) கட்சிகளின் ஆதரவை பெற்றது.

இதையடுத்து, SLMC உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் தவிசாளர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார். இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு 11 வாக்குகள் கிடைத்தன.

NPP உறுப்பினர் பாஹிமா தவிசாளர் பதவிக்கு NPPயினால் பரிந்துரைக்கப்பட்டார். இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவருக்கு 03 வாக்குகள் கிடைத்தன. ACMC 4 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர்.

அதேபோல், உப தவிசாளர் பதவிக்கு தேசிய காங்கிரசைச் சேர்ந்த F.நாஜித் உறுப்பினர் பரிந்துரைக்கப்பட்டு, ஏகமனதாக தேர்வானார்.

பதவிக் கால ஒழுங்கமைப்பு:

இன்று காலை SLMC செயலாளர் நிஸாம் காரியப்பர் தலைமையில் நடைபெற்ற முக்கியக் கலந்துரையாடலில் பதவிகளை ஒழுங்கமைக்கும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

  • முதல் 2 ஆண்டுகள்:
    தவிசாளர் பதவி அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த SLMC உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.
    • அதில் முதல் 18 மாதங்கள்: ஏ.எஸ்.எம். உவைஸ்
    • அதனைத் தொடர்ந்து 6 மாதங்கள்: ரியா மசூர்
  • அடுத்த 2 ஆண்டுகள்:
    தவிசாளர் பதவி ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த SLMC உறுப்பினருக்கு வழங்கப்படும்.
  • உப தவிசாளர் பதவி:
    தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு உறுப்பினருக்கு வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரசின் பலத்த நிர்வாக கட்டுப்பாடு மற்றும் கூட்டணி உறுதிப்பாட்டை காட்டுகின்றன.