Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

அட்டாளைச்சேனையில் இன்று இரவு 8 முதல் நாளை காலை 6 வரை குடிநீர் துண்டிப்பு

Posted on July 2, 2025 by Admin | 236 Views

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் குடிநீர் விநியோகம் இன்று (புதன்கிழமை) இரவு 8.00 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 6.00 மணி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நீர் துண்டிப்பு, அம்பாறை கொண்டவட்டுவான் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட அவசர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் காரணமாக ஏற்படுகிறது.

இதனை முன்னிட்டு, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த குடிநீர் பாவனையாளர்கள், தேவையான அளவு நீரை முன்னதாகவே சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது